வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் குவிண்டால் பருத்தி அதிகபட்ச விலை ஆக ரூபாய் 7,109 க்கு ஏலம் போனது. மொத்தம் 23 குவின்டால் பருத்தி ரூபாய் 21,91,608 க்கு ஏலம் போனது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில், வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
இருப்பினும் நடப்பு பருவத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா (பொ) உத்தரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் படுத்தியினை கொண்டு வந்தனர். ஐந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7,109 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 6, 199 ரூபாய்க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 6 ஆயிரத்து 801 க்கும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 323.23 குவிண்டால் பருத்தி 21 லட்சத்து 91 ஆயிரத்து 608 ரூபாய்க்கு ஏலம் போனது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெற ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர் வீராசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.