பாபநாசத்தில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என வலியுறுத்தி மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .

பாபநாசம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி ரயில்வே ஸ்டேஷன் ரோடு கடைவீதி தெற்கு ராஜவீதி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வந்தடைந்தது.

பேரணியின் போது ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்பம் மையத்தின் சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்று சிலம்பம் மான் கொம்பு இரட்டை கம்பு சுருள் வாள்வீச்சு கம்பு சண்டை அலங்கார சுற்று பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர் .

முன்னதாக நிகழ்ச்சியினை பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பிரேம்நாத் பைரன் தலைமை வைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பாபநாசம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி த லைமை காவலர் யோகா பயிற்சியாளர் ராம்பிரசாத் சிலம்ப ஆலோசகர்கள் குமார் ரஜினிகாந்த் மணிமாறன் குழந்தைவேலு பிரகாஷ் காவியா மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை சிலம்ப தேர்வாளர் அய்யப்பன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தகுதி திறனாய்வு நடத்தி பதக்கம் கேடயம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முடிவில் சிலம்பம் பயிற்சியாளர் தினேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *