பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வேல்முருகன் முன்னிலையில், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து ஜீன் 30-ஆம் தேதியான இன்று கிராமசபை கூட்டம் நடந்தது.
இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் வீடுகள் வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வேல்முருகனிடம் மனு அளித்தனர்.
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து திட்ட அலுவலர் செல்வமணியன் கலந்து கொண்டார்.மற்றும் ஊராட்சி செயலர் பரிமளம், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்