சினமனூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களுக்கு பல்வேறு புகார்கள் உள்ளன இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உத்தரவின்படி சின்னமனூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதி மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்

இதில் இரண்டு கடமைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உடன் ஒரு கடைக்கு 25 ஆயிரம் விதம் இரண்டு கடைகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது

மேலும் சின்னமனூர் போலீஸ் துறை அதிகாரிகளுடன் சென்று மேற்கண்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தனர் இந்த நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சின்னமனூர் நகராட்சி சுகாதார அதிகாரிகளை மனதார பாராட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *