ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
இந்த விழாவிற்கு கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவரையும் வரவேற்றார் மாணவிகள் வகுப்பு வாரியாக பொங்கல் வைத்தனர்
ஆலோசனை குழு உறுப்பினர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர் கல்லூரி மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது