செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாநகராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட புழல் , கதிர்வேடு ராஜன்பர்ணபாஸ் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தற்போது தவெகா கட்சியில் தலைவர் விஜயின் முன்னிலையில் இணைந்து கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மாட்டு பொங்கலான இன்று கதிர்வேடு பகுதியில் உள்ள மைதானத்தில் பொதுமக்களுடன் 21 புதுப்பானைகளில் பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டு விவசாயம் செய்ய உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு உணவுப் படைத்து அதன் பின் மாடுகளுக்கு மாட்டு வண்டியில் ஊர்வலமாக தனது ஆதரவாளர்களுடன் சென்றார் .
பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.