எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு வடமதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவன தலைவர் மான எம்ஜிஆர் 109.ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் எம். மகேந்திரன் தலைமையில் எல்லாபுரம் அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதில் நிர்வாகிகள் ராஜீவ் காந்தி,நாகப்பன்,ராஜா, தமிழ் மன்னன், ஜெகதீஷ், பிரண்ட்ஸ், மாவீரன், சரத், சரவணன் பொதுமக்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்….