திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம் இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி முதல் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார் இவருக்கு துணையாக இவரது மகள் பழனியம்மாள் என்பவர் உடன் இருந்தார்.இன்று அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்காக 2வது மாடியில் இருந்து லிப்ட் மூலம் தனது மகளுடன் பஞ்சவர்ணம் கீழே இறங்கிக் கொண்டிருந்தார் அப்போது லிப்ட் பழுதாகி இயங்கவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த பஞ்சவர்ணம், மகள் பழனியம்மாள் கூச்சலிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சுமார் 30 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்

இதனிடையே பஞ்சவர்ணத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததால் அவரை மீண்டும் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் இடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *