மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானின் திருவிளையாடல் களை பக்தர்களுக்கு உணர்த்தும் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ந் தேதி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடக்க இருக்கிறது.
ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந் தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூலத்தி ருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும்.
சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவி ளையாடல்கள், இறைவனின் லீலைகளாக ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறு வது சிறப்பானதாகும்.
இந்த ஆண்டிற்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன்
தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் நேற்று காலை சிறப்பு பூஜை கள், யாக பூஜைகள் நடந்தன.
காப்பு கட்டிய சந்திரசேகர் பட்டர் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்தார். பின்னர்கொடி யேற்றம் நடந்தது.
அப்போது மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.
விழாவில் நேற்று முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை கோவிலுக்குள் 2-ம் பிர காரத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடை பெறும். அதை தொடர்ந்து இறைவனின் திருவி ளையாடலை விளக்கும் லீலைகள் நாள்தோறும் நடக்க இருக்கின்றன..
5-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 6-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 7-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 8-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 9-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 10-ந் தேதி பாணனுக்காக சென்று அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம் பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெறுகின்றன.
11-ந் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு 6.30 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் பட்டாபிஷேகமும் நடக்க இருக்கின்றன. 12-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 13-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 14-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளன. 15-ந் தேதி சட்டத்தேர் வீதி உலாவும்,
இரவு சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமி-அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.. 16-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.