திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம்ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா உத்தரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி கொண்டு வந்தனர். சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதி 4 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலை ஆக குவிண்டால்ரூபாய் 8,399-க்கும்,குறைந்தபட்ச விலையாகரூபாய் 7,289 க்கும்,சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 7, 729 க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினம் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 180.27 குவிண்டால் பருத்தி ரூபாய் 13 லட்சத்து 99 ஆயிரத்து 161 க்கு ஏலம் போனது.

கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற 14 ஏலத்தில்7817.19 குவிண்டால் பருத்தி ரூபாய் 5 கோடியே 34 லட்சத்து 24 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்திக்கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெறஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீராசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *