தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஒன்றிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கம்பம் சி.பி.யு. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
இந்த போட்டிகளில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் இதில் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் கைப்பந்து போட்டியில் முதல் இடத்தையும் ரூபாய் 21,000 ரொக்கத் தொகையையும் கபடி போட்டியில் முதல் இடத்தையும் ரூபாய் 21 000 ரொக்கத் தொகையையும் எறிந்து போட்டியில் முதல் இடத்தையும் ரூபாய் 24. 000 ரொக்கத் தொகையையும் கயிறு இழுத்தல் போட்டியில் முதல் இடத்தையும் ரூபாய் 27.000 ரொக்கத் தொகையையும் தடகள போட்டியில் ரூபாய் 8.000 ரொக்கத் தொகையையும் பரிசாகப் பெற்றவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டு மாணவிகள் படைத்தனர்
மேலும் இந்த பரிசினை பெற்று ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு கல்லூரி ஆடிட்டோரியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது
இந்த விழாவிற்கு தலைமை வகித்து கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் எம் எல் ஏ கல்லூரி இணைச் செயலர் என்.எம்.ஆர். வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி
ரேணுகா உடற் கல்வி பொறுப்பாளர் எஸ். சுசீலா உடற் கல்வி ஆசிரியை ஆர் சூர்ய பிரபா உள்பட கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் கல்லூரி அலுவலர்கள் துறை சார்ந்த அனைத்துத்துறை மாணவிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி வாழ்த்தி பேசினார்கள் கல்லூரி திருவள்ளுவர் மின்னியல் நூலகர் என் ராஜலட்சுமி நன்றி கூறினார்