கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட நிர்வாகிகள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அணிகளின் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுக்கான அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் கிருஷ்ணகிரி, குப்பம் சாலையில் உள்ள D C M-மஹால் திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு. தே.மதியழகன்.,MLA, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடத்தி, சிறப்புரையாற்றினார்கள்.

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள்,அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *