திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக லால்குடி விஜயகுமார், செயலாளராக திருச்சி விஜயகுமார், பொருளாளராக தாமோதரன் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் துணைத் தலைவராக காசிநாத், இணைச் செயலாளராக இளம் வழுதி, இணைப் பொருளாளராக சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நிறுவனர் நாசர் வாழ்த்து தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *