திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் வள்ளலார் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் முன்னிலை வகித்தார்.

அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி வள்ளலார் அஞ்சல் தலை குறித்து பேசுகையில், இந்திய அஞ்சல் துறையால் 2007 ஆம் ஆண்டு வள்ளலாரின் நினைவார்த்த அஞ்சல் தலை 500 பைசா (5 ரூபாய்). மதிப்பில் வெளியிட்டது.

தைப்பூசத் திருநாள் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வாழ்க்கையிலும், அவர் வழங்கிய ஆன்மீக சிந்தனைகளிலும் மிக முக்கிய இடம் பெற்றுள்ளது.
வள்ளலார், மனித குலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கண்ட கருணை வடிவம். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர், உயிர் அனைத்திலும் அன்பும் இரக்கமும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்றார். நிறைவாக பொருளாளர் தாமோதரன் நன்றி கூறினார்.

வடலூரில் அமைந்த சத்திய ஞான சபை, தைப்பூசத்தின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் மையமாக விளங்குகிறது. இங்கு ஏற்றப்படும் ஜோதி, எந்த உருவமும் இல்லாத, அனைத்தையும் இணைக்கும் அருள் ஒளியின் சின்னமாக திகழ்கிறது. இந்த ஒளி வழிபாடு, மனிதனை மதம், சாதி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் உயர்த்துகிறது.

தைப்பூசம் வள்ளலார் வழியில், அன்னதானம், உயிர் இரக்கம், சுத்தமான வாழ்க்கை, சன்மார்க்கம் ஆகியவற்றை நினைவூட்டும் நாளாகும்.அன்று வழங்கப்படும் அன்னம், பசியை மட்டுமல்ல, மனித மனத்தையும் நிரப்புகிறது. எனவே, தைப்பூசமும் வள்ளலாரும் நமக்கு சொல்லும் செய்தி ஒன்றே கருணையே கடவுள் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *