திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை கொசுவம் பாளையம் சாலை பிரிவு பகுதியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் தலைமையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று 250 க்கு மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் மற்றும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் போலீசார் அவர்களை கைது செய்ய முன் வந்தனர்

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் கைது செய்து தனியா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *