தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் என் ஊர் என் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி 2030 ஜ மையப் பொருளாக கொண்டு மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை கொண்ட தனிநபர்கள் மக்கள் பிரதிநிதிகள் இளம் தலைவர்கள் துறை சார்ந்த வல்லுநர்கள் உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் வணிகர்கள் சங்கப் பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோரிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கேட்டறிந்து இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பி சினேஹாப் பிரியா மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜ்குமார் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தமிழரசி பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன் மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண் உதவி வனப் பாதுகாவலர் சாய்சரண் ரெட்டி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகமது வன அலுவலர் பயிற்சி புவனேஷ் நகர் என்ற தலைவர்கள் தேனி ரேணு பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் சின்னமனூர் அய்யம்மாள் ராமு கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை பேரூராட்சி மன்றத் தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி தேவாரம் லட்சுமி பால் பாண்டி கோம்பை முல்லை மோகன் ராஜா ஒடைப்பட்டி வழக்கறிஞர் தனுஷ்கோடி அனுமந்தன் பட்டி ராஜேந்திரன் கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் பண்ணைப் புரம் லட்சுமி இளங்கோ மார்க்கையன்கோட்டை ஒ.ஏமுருகன் பழனிசெட்டிபட்டி வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி தென்கரை வே. நாகராஜ் தாமரைக்குளம் ச. பால்பாண்டி வடுகபட்டி சி. நடேசன் வீரபாண்டி கீதா சசி குச்சனூர் பி.டி.ரவிச்சந்திரன் தேவராம் லட்சுமி பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்