தமிழக அறிவித்த நிவாரணத்தொகையை பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வழங்கிட கோரி கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
சம்பா தாளடி நெற்பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை போக்கிட பிப்ரவரி மாதம் இறுதிவரை மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும்,டித்வா புயல் பெரும் மழையால் பாதிப்படைந்த குறுவை சாகுபடி நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வழங்கிட கோரியும்,குறுவை சம்பா பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பிட்டு தொகை கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.