வலங்கைமானில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல், மாலை அணிவித்து தாம்பூலம், சேலை மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானிய பொருட்கள் வழங்கினர். மருத்துவ அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர் காமாட்சி, மேற்பார்வையாளர் மனோகரி, சாந்தி, ராசாத்தி, அலுவலக இளநிலை உதவியாளர் அறிவழகன், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜினோ ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவு மற்றும் ஆரோக்கியம் பற்றி நலக்கல்வி அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி பணியாளர்கள் அமுதா, செல்வகுமாரி, சித்ரா, ராமத்திலகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிறைவில் அங்கன்வாடி பணியாளர் பிரேமா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *