தஞ்சாவூர் மாவட்டம்,:தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில், இயங்கி வரும் அரசு பணிபுரியும் மகளிர் விடுதியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது
நிகழ்ச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூகநல அலுவலர்,திருமதி.லதா
பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெணகள் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்தினார். மேலும் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. ஸ்ரீபிரியா அவர்கள் பெண் குழந்தை கடத்தல் பற்றியும் அதற்கான விழிப்புணர்வு பற்றியும் கலந்துரையாடி சிறப்புரையாற்றினார்.
.தொடர்ந்து பல கலை நிகழ்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மகளிர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவில்விடுதி மேலாளர் நன்றி கூறினார்