தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இம்பெல்லா கருவி செயல்முறையின் வழியாக தீவிர இதய பம்ப் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு இதயம் ஓய்வெடுக்கவும் மற்றும் இயல்பு நிலைக்கு வரவும் உதவுகிற ஆஞ்சியோ பிளாஸ்ட் மருத்துவச் செயல் முறையை டெல்டா மாவட்டங்களில் அறிமுகம் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு வெளியே, இம்பெல்லா மெக்கானிக்கல் இதய பம்ப் உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செயல்முறையை மேற்கொண்டிருக்கும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை பெறுகிறது. காவிரிடெல்டா பிராந்தியத்தில், உலகின் மிகச்சிறிய இதய பம்ப் உதவியோடு இம்மருத்துவச் செயல்முறையை வெற்றிகரமாக மீனாட்சி மருத்துவமனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதய செயலிழப்பால் அவதிப்பட்ட ஒரு நோயாளிக்கு கால்சியம் படிமங்களை அகற்றி மூன்று ஸ்டென்ட்களை பொருத்தும் பணியை மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக செய்திருக்கின்றனர். இதயவியல் துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை சிறப்பு நிபுணருமான மருத்துவர். கேசவமூர்த்தி தலைமையிலான மருத்துவ குழுவில் இதயவியல் சிறப்பு மருத்துவர். சபரிகிருஷ்ணன், இதயவியல் துறையின் முதுநிலை சிறப்பு மருத்துவர். ஸ்ரீனிவாசன் மற்றும் இதயம் சார்ந்த மயக்கமருந்தியல் துறை நிபுணர் மருத்துவர். சென்ன கேசவலு ஆகியோர் இடம்பெற்றனர்.
இம்பெல்லா என்பது ஒரு பொறியியல் சார்ந்த இதய பம்பாகும், இதயத்தில் இருந்து இரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாக உதவும் பம்பாக இது செயல் படுகிறது. மருத்துவச் செயல்முறை மேற்கொள்ளப்படும் நேரத்திலும் மற்றும் அதற்கு பிறகு உடனடியாகவும் இதயத்திலிருந்து இரத்தத்தை இக்கருவி பம்ப் செய்வதன் மூலம் சிக்கலான ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையின் போது பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
இதன் மூலம் இதயம் ஓய்வெடுக்கவும், இயல்பு நிலைக்குத் திரும்பவும் உதவுகிறது. மிக முக்கியமான குருதியியக்க ஸ்திரத்தன்மையை இந்த இயங்குமுறை வழங்குகிறது. நிலையாக இரத்தம் இதயத்திற்கு செல்வதும் மற்றும் அனைத்து உறுப்புகளின் இயல்பான இயக்கங்களுக்கு ஆதரவாக இதயமும், இரத்தநாளங்களும் பராமரிக்கப்படும் நிலையையே இது குறிக்கிறது. இந்த சிகிச்சை செயல்முறைக்கு பிறகு இம்பெல்லா நோயாளியிடமிருந்து அகற்றப்பட்டது. அதன்பிறகு முழுமையாக குணமடைந்திருக்கும் இந்நோயாளி இப்போது இயல்பான வாழ்க்கையை மீண்டும் சுறுசுறுப்பாக தொடங்க முழுமையான தகுதியோடு இருக்கிறார். தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இம்பெல்லா மூலம் சாதனை படைத்துள்ளது.