துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகிக்க நகர செயலாளர் மெடிக்கல் முரளி வரவேற்புரை நிகழ்த்தினார்.எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சைதை சாதிக் பேசும்போது, தேசிய கல்விக் கொள்கை வாயிலாக மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பது, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய கல்வி நிதியை தர மறுப்பது போன்ற தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது இதை திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது .
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ், மயில்வாகனன் ,அவை தலைவர் அம்பிகாபதி ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ சரவணன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்து செல்வன், அர.ந.அசோகன், முசிறி ராமச்சந்திரன், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ்,கலை இலக்கிய பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார், சுற்று சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் திருமூர்த்தி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருபா, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை, மாவட்ட பிரதிநிதி மதியழகன்,பொது குழு உறுப்பினர் கிட்டப்பா, நகர துணை செயலாளர்கள் பிரபு, இளங்கோவன், பொருளாளர் சீனிவாசன், அவைத்தலைவர் தர்மலிங்கம், அரசு வழக்கறிஞர் வழக்கறிஞர் ஜெயராஜ்,தலைமை கழக பேச்சாளர் துரை. பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், இளையராஜா,ஜானகிராமன், செந்தில்குமார்,நித்யா கிருஷ்ணகுமார்,மாவட்ட பிரதிநிதிகள் ரெங்கநாதபுரம் கார்த்திக், சிறுபான்மையினர் அணி வழக்கறிஞர் முகமது ரபீக், நாகலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன்,எரகுடி எம்ஜி பாலா, ஆதிதிராவிடர் அணி மணிவண்ணன், ஐடி விங்க் சேகர், மெடிக்கல் பிரேம்குமார்,மத்திய ஒன்றிய துணை செயலாளர் அன்பு காந்தி ,18 வது வார்டு மோகன்,சசி நல்லுசாமி,இளைஞர் அணி ஸ்டிடுயோ சசிகுமார்,சந்ரு,ரெங்கநாதபுரம் பிரபாகரன்,ஆட்டோ மணி, பிளக்ஸ் சதீஷ், மற்றும் கழக நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள், மகளிர் அணியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்