திருவொற்றியூர்

மணலி மண்டலத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பள்ளி கூட கட்டிடம் கட்டும் பணி, மின்மயானம் அமைக்கும் பணி, கடப்பாக்கம் ஏரியில் கட்டப்பட்டு வரும் சுற்றுசூழல் பூங்கா கட்டும் பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் மணலி பாடசாலையில் அமைந்துள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வழங்கி, பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது,வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் மணலி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை இன்று ஆய்வு செய்தோம்.
புறநகர் சென்னை பகுதிகளான மணலி, மாதவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் சென்னையில் இணைக்கப்பட்ட உடன் புறநகர் பகுதிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டபணிகளை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் வடசென்னை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மணலி மண்டலத்தை பிரிப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை தற்போது நிறைவேற்றும் திட்டம் இல்லை. இதுகுறித்து அமைச்சரே முடிவெடுப்பார் எனவும் அடுத்த உள்ளாட்சி தேர்தலில் மணலியை பிரிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

மேலும் புழல் உபரிநீர் கால்வாய் பரிமாரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், துணை ஆணையாளர் படிகல், செயற்பணி துறை துணை ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, வடசென்னை வடக்கு சென்னை மாநகராட்சி இணை ஆணையர் கட்டா ரவிதேஜா, மண்டல செயற்பொறியாளர் தெய்வேந்திரன், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் முல்லை ராஜசேகர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *