புதுச்சேரி அரியாங்குப்பம் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் 108 கோரிக்கைகள் அடங்கிய மனு பாஸ்கர் (எ)தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ.வழங்கினார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என் பது உள்பட 108 கோரிக்கைகள் அடங்கிய மனு வினை முதல்- அமைச்சர் ரங்க சாமியிடம் பாஸ்கர் (எ)தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ. வழங்கினார். 108 கோரிக்கைகள்

அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்தி முதல்-அமைச்சர் ரங்க சாமியை சந்தித்து தனது தொகுதி மேம்பாட்டிற்காக 108 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி அவற்றை பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

அந்த மனுவில் பாஸ்கர் எம்.எல்.ஏ. கூறியிருப்பதா வது:-உள்ஒதுக்கீடு ஆதிதிராவிட இன மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். சேத்திலால்நகரில் பழுதடைந்துள்ள சமுதாய நலக்கூடத்தை மறுசீரமைப்பு செய்து நகரில் சாலை மற்றும் வாய்க்கால் வசதியை மேம்ப டுத்த வேண்டும். அரசு உயர் நிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள கோவில் இடத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அருந்ததிபுரம் அன்னை நகரில் புதிய சிமெண்டு சாலைகளும். பழைய கல்லூரி மாணசமுதாய கழிப்பறையை இடித் துவிட்டு அங்கு படிக்கும் அறை அமைத்துத்தர வேண் டும். வீராம்பட்டி னம் பவானி நகர் விரிவில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கவேண்டும். சிங்காரவேலர் உயர் நிலைப்பள்ளிக்கு கூடுதலாக 6 வகுப் பறைகள் கட்டித்தர வேண்டும்.

பறவைகள் சரணாலயம் முருங்கப்பாக்கம் மேல் நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரும், உள்விளையாட்டு அரங் கம், காய்கறி தோட்டம், கூடு தல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தியாகி துளசிங்கம் பெயரை சூட்ட வேண்டும். முருங்கப் பாக்கம் சந்திப்பில் சிக்னல் விளக்குகளை பராமரித்து போக்குவரத்து போலீசாரை நியமிக்கவேண்டும்.

மீனவர்கள் வலை பின்னுவ தற்கும் ஓய்வு எடுக்கவும் கூடம் அமைத்துத்தர வேண் டும். அரியாங்குப்பம் பகுதி யில் 10 இடங்களில் குறுங்காடு கள் அமைக்கவேண்டும். அரியாங்குப்பம் ஆற்றில் உள்ள மணல் திட்டுகளை மேம்படுத்தி பறவைகள் சரணாலயம் அமைக்கவேண் டும். அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமூக சுகாதார நிலையமாக தரம் உயர்த்தவேண்டும் ஆம்புலன் சுக்கு 24 மணிநேரமும் டிரைவர் நியமிக்கவேண்டும் என்பன உள்பட 108 கோரிக் கைகள் அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *