திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தின் சார்பில் ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்காக கிரிக்கெட் பேட், பந்து, ஸ்டெம்ப் மற்றும் கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி (அதிமுக) சார்பில் நடைபெற்றது.
நிகழ்வில் அதிமுக திருப்பூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பி.கே. ராஜ் கலந்து கொண்டு, இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட்டு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன். மோகன்ராஜ், குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், ருத்ராவதி பேரூராட்சி செயலாளர் தமிழரசன் மற்றும் நகர செயலாளர் தமிழரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
இந்த முயற்சி மூலம் கிராமப்புற இளைஞர்கள் அதிகளவில் விளையாட்டில் ஈடுபட ஊக்கம் பெறுவார்கள் என்றும், சமூக ஒற்றுமை மற்றும் உடற்கல்வி மேம்பட இது உதவும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு உபகரணங்களை பெற்ற இளைஞர்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர். கிராமப்புறங்களில் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து வளர்க்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.