கோவை மாவட்டம் வால்பாறையில் ஓ.பி.எஸ்.அணியின்நகரச்செயலாளராக பணியாற்றி வந்த மிக்சர் கடை முருகன் மற்றும் அந்த அணியின் அம்மா பேரவை செயலாளர் பால சுப்ரமணியன் ஆகியோர் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி கொறடாவும், தலைமை நிலைய செயலரளருமான எஸ்.பி. வேலுமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அவருக்கு சால்வை மற்றும் மலர் மாலை அணிவித்து ஓபிஎஸ் அணியின் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர்
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர மேற்கு பொறுப்பாளர் சலாவுதீன் அமீது, நகர அவை தலைவர் சுடர் பாலு, நகர மாணவரணி செயலாளர் ரா. லோகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்