பிரதமரின் வருகையையும், மத்திய அரசோடு முதலமைச்சர் கொண்டுள்ள நல் உறவையும் பயன்படுத்தி 20 அம்சத் திட்டங்களைச் சாதித்துக் காட்ட வேண்டும்!”
புதுச்சேரி:

எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எமது கட்சி சார்பில் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். புதுச்சேரிக்குத் தேவையான அனைத்து நிதி மற்றும் வளர்ச்சி உதவிகளைப் பிரதமர் மோடி அவர்கள் செய்து வருவதாகவும், பிரதமர் புதுச்சேரியின் மீது தனி அக்கறை கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் தொடர்ந்து பெருமிதத்துடன் மக்களிடம் கூறி வருகிறார்.


மத்திய அரசோடு முதலமைச்சர் கொண்டுள்ள இந்தச் சுமுகமான உறவும், கூட்டணியும் புதுச்சேரி மக்களுக்கு வெறும் வார்த்தைகளாக மட்டுமின்றி, வாழ்வாதார மாற்றங்களாக மாற வேண்டும்.

எனவே, பிரதமரின் இந்த வருகையைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட 20 முக்கிய விரிவான மக்கள் நலக் கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் பிரதமரின் மேடையிலேயே ஆணித்தரமாக வலியுறுத்தி, மாநிலத்திற்கான நிதி மற்றும் உரிமைகளை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும் என ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.கே. ராஜசேகர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் 20 அம்ச விரிவான விளக்க அறிக்கைகள்:
I. மாநில உரிமை மற்றும் நிதிச் சுதந்திரம்:
சிறப்பு மாநில அந்தஸ்து (90% மத்திய மானியம்): முதல்வர் குறிப்பிடும் மத்திய-மாநில ‘இரட்டை எஞ்சின்’ அரசு இணக்கமாக உள்ள இந்தச் சூழலைப் பயன்படுத்தி, புதுச்சேரிக்கு “சிறப்பு மாநில அந்தஸ்து” பெற்றுத் தர வேண்டும். இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களுக்கு 90% நிதி உதவியை உறுதி செய்து, மாநில பட்ஜெட்டில் பெரும் நிதியை மிச்சப்படுத்தி மக்கள் நலப்பணிகளுக்கு ஒதுக்க வேண்டும்.


ஒட்டுமொத்தக் கடன் மற்றும் வட்டிச் சுமை நீக்கம்: புதுச்சேரியின் ₹13,000 கோடிக்கும் மேலான ஒட்டுமொத்தக் கடன் சுமையை மத்திய அரசு தள்ளுபடி செய்வதோடு, ஆண்டுக்கு ₹1,900 கோடிக்கும் மேல் வட்டியாகச் செலுத்தப்படும் சுமையிலிருந்தும் மாநிலத்தை விடுவிக்க வேண்டும். இந்த வட்டிப் பணத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் சாமானிய மக்களின் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் மற்றும் இதர வாழ்வாதாரத் திட்டங்களை மேம்படுத்த முடியும்.


16-வது நிதி ஆணையத்தில் இணைப்பு: மத்திய வரி வருவாயில் மற்ற மாநிலங்களுக்குக் கிடைப்பது போல் புதுச்சேரிக்கும் உரிய பங்கினைப் பெற்றுத் தர, வரவிருக்கும் 16-வது நிதி ஆணையத்தில் புதுச்சேரியை ஒரு முழுமையான மாநிலமாகக் கருதி இணைக்க வேண்டும்.
II. பொது சுகாதாரம் மற்றும் கல்வி:

  1. அரசு மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதயம், நரம்பியல், சிறுநீரகம் உள்ளிட்ட உயர்தர சிகிச்சைகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி (Super Specialty) வசதிகளை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடி கடனில் சிக்காமல், அனைத்து உயர்தர சிகிச்சைகளையும் இங்கேயே இலவசமாகப் பெற வேண்டும்.
  2. தேசியக் கல்வி நிறுவனங்கள் (IIT/ IIM): உயர்தரக் கல்வியைத் தேடி நம் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க, புதுச்சேரியிலேயே IIT அல்லது IIM போன்ற உலகத்தரம் வாய்ந்த தேசியக் கல்வி நிறுவனங்களைத் தொடங்க வேண்டும்.
  3. தனியார் மருத்துவ இட ஒதுக்கீடு: மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு (Centac) நிரந்தரமாகப் பெறுவதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.
    III. தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு:
  4. பஞ்சாலைகள் மீட்பு (15,000 புதிய வேலைகள்): புதுச்சேரியின் அடையாளங்களான ஏ.எப்.டி (AFT), சுதேசி, பாரதி மற்றும் பின்கோ ஆகிய ஆலைகளை மீண்டும் இயக்க, மத்திய ஜவுளித் துறையிடமிருந்து 100% முழு நிதியைப் பெற்று, நவீன இயந்திரங்களுடன் அவற்றைச் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் குறைந்தபட்சம் 15,000 தொழிலாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாகக் கிடைக்கும். தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
  5. மின்சாரத் துறை பொதுத்துறை பாதுகாப்பு: மின்சாரத் துறை தனியார்மயமாவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். ஏழை மக்களின் நலன் கருதி இது பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும்; அப்போதுதான் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் மக்களுக்குத் தடையின்றி கிடைக்கும்.
  6. 100% உள்ளூர் இளைஞர்களுக்கு அரசு வேலை: புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதில் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு மட்டுமே 100% முன்னுரிமை சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட வேண்டும்.
  7. மெகா ஐடி பார்க் ( IT Park ): படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்வதைத் தவிர்க்க, புதுச்சேரியில் உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைத்து, ஆயிரக்கணக்கான கணினித் துறை இளைஞர்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
    IV. பாதுகாப்பு மற்றும் மீனவர் நலன்:
  8. பெண்கள் பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் பயிற்சி: நகரின் அனைத்துப் பகுதிகளையும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குக் கட்டாயத் தற்காப்புப் பயிற்சி (Martial Arts) அளிக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
  9. காரைக்கால் மீனவர் விடுதலை மற்றும் உடைமை மீட்பு: இலங்கைச் சிறையில் வாடும் காரைக்கால் மீனவர்களை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் விசைப்படகுகள் மற்றும் உடமைகளை மீட்டுத் தர வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய தொல்லைகள் இல்லாமல் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
  10. மீன் பதப்படுத்தும் பூங்கா: சர்வதேசத் தரத்திலான குளிரூட்டப்பட்ட கிடங்குகள் மற்றும் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைத்து மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
    V. உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல்:
  11. இலவச மின்சாரப் பேருந்து சேவை: மத்திய அரசின் 100% நிதியுடன் நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு அதிகப்படியான புகையில்லா மின்சாரப் பேருந்துகளை இயக்கி, பொதுப் போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.
  12. விமான நிலைய விரிவாக்கம்: நீண்டகாலமாகக் கிடப்பிலுள்ள விமான நிலைய விரிவாக்கப் பணிகளை முடித்து, சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து (Cargo Hub) வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  13. புதிய சட்டமன்ற வளாகம்: மாநிலத்தின் நிர்வாக வசதிக்காகத் திட்டமிடப்பட்டுள்ள புதிய சட்டமன்ற வளாகம் மற்றும் ஒருங்கிணைந்த செயலகம் கட்ட மத்திய அரசு ₹500 கோடி முழு நிதி வழங்க வேண்டும்.
  14. நிலத்தடி நீர் மற்றும் கடல் நீர் பாதுகாப்பு: தொழிற்சாலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கவும், கடலோரக் கிராமங்களில் கடல் நீர் உட்புகுவதைத் தவிர்க்கவும் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
  15. சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ): புதிய தொழிற்சாலைகளை ஈர்க்க சிறப்பு வரிச்சலுகைகளுடன் கூடிய பொருளாதார மண்டலங்களை உருவாக்கி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
  16. சுற்றுலா மேம்பாடு: புதுச்சேரியின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஆன்மீக மற்றும் கடற்கரைச் சுற்றுலாவை உலகத் தரத்திற்கு உயர்த்தி மாநில வருவாயைப் பெருக்க வேண்டும்.
  17. பொது உள்கட்டமைப்பு மேம்பாடு: புதுச்சேரியின் அனைத்து சாலைகளையும் தரம் உயர்த்தி, நவீன மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய சிறந்த நகரமாக மாற்ற சிறப்பு நிதி பெற வேண்டும்.
    “மார்ச் 1 அன்று நடைபெறும் நிகழ்ச்சி வெறும் அரசியல் நிகழ்வு அல்ல. அது புதுச்சேரி மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வரலாற்று தருணம்.
    மேற்கண்ட 20 கோரிக்கைகளையும் முதல்வர் அவர்கள் பிரதமரிடம் ஆணித்தரமாக வலியுறுத்தி, எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்று தர வேண்டும்” என்று A.K.ராஜசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
    இச்செய்தியினை தங்கள் செய்திப் பிரிவின் மூலம் சிறப்பான செய்தியாக வெளியிடுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
    நன்றி இங்கனம்
    A.K.ராஜசேகர் நிறுவனத் தலைவர், ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *