திருவாரூர் மாவட்ட சுகாதார அலுவலர் ஆணைக்கு இணங்க வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முகமது தாரிக் வழிகாட்டுதலின்படி டெங்கு எதிர்ப்பு மாதம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் டெங்கு எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். முன்னதாக பேரணியை வள்ளி தலைமை ஆசிரியர் பொன்னையா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். அரித்துவாரமங்கலம் சுகாதார மேற்பார்வையாளர் கோபு, சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக் ராஜா, அரவிந்தன், சதீஷ்குமார், பாலாஜி, ஆசிரியர்கள் அண்ணாதுரை, உடற்கல்வி ஆசிரியை பியூலா ரூபியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.