மதுரை கரும்பாலை நடுத்தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் இசக்கி முத்து(27). இவர்மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருந்த பெண் ஒருவருடன் குடும் பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு இசக்கி முத்து வின் நண்பர் வீரமணி கண் டனை கரும்பாலையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் அடித்துள்ளார் இதை தட்டி கேட்க சென்றபோது அவருடைய அண்ணன் பழனியப்பனுக்கும் இவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் கத்தியால் கத்துக்குத்தப்பட்டார். இதில் முன் விரோதம் இவர்களுக்குள் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் உலக தமிழ்சங்கம் அருகே கூட்டுறவு ரேஷன் கடை முன்பாக சென்ற இசக்கி முத்துவை மூன்று பேர் வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர். அவர்களில் இரண்டு பேர் இசக்கி முத்துவை மடக்கி பிடித்துக்கொள்ள ஒருவர் அருகில் கிடந்த கல்லால் தாக்கி அவரை கொலை செய்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து தப் பிச்சென்று விட்டனர் இந்த செய்தி அறிந்த அண்ணா நகர் போலீசார் இசக்கி முத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தி அண் ணன் தம்பிகளான அண் ணாநகர் கரும்பாலை கிழக்கு தெருவை சேர்ந்த உதயகுமார் (27), பழனி யப்பன் (25), இவர்களின் நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த நல்லமுத்து மகன் காளிதாஸ் (30) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *