சென்னை மாநகராட்சி எண்ணூரில் உங்களுடன் ஸ்டாலின் இரண்டாவது நாள் திட்ட முகாம் பொதுமக்கள் பெண்கள் ஆர்வத்துடன் முகாமில் பங்கேற்பு உடனுக்குடன் தீர்வு.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை ரேஷன் கார்டு , ஆதார் கார்டு , ஜாதி சான்றிதழ்களை உடனடியாக வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

எண்ணூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் 15 துறைகளின் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்படுகிறது இந்த திட்டம் மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் மண்டலம் எண்ணூர் 2 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோமதி சந்தோஷ் ஏற்பாட்டில் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டான்லின் திட்டம் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

இந்த முகாமை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பிசங்கர் மண்டல குழு தலைவர் தி மு தனியரசு , வைமா அருள்தாசன் , மாமன்ற உறுப்பினர் கோமதி சந்தோஷ் திருவெற்றியூர் மண்டலம் உதவி ஆணையர் விஜய் பாபு.செயல் பொறியாளர் பாண்டியன். பாபு. உதவி செயல் பொறியாளர் நமச்சிவாயம்.ஆகியோர் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதோடு கலைஞர் உரிமைத்தொகை , ஜாதி சான்றிதழ் , ஆதார் கார்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

13 துறைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் பரிசீலனை செய்யப்பட்டு உடனுக்குடன் திருத்தம் செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் இந்த முகாமில் பயன் பெற்ற பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

SRINIVASAN
9171920032

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *