அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு பேசினார் அவர் பேசியது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கழக ஆட்சியில் எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது மக்கள் பயன்பெறும் திட்டங்களை நமது தொகுதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளோம். என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் கள்வேளிபட்டி,தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைகுளம், குட்டிமேய்கிபட்டி,
சின்னஇலந்தைகுளம், ஆகிய கிராமங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முத்தையன், அருண்குமார், மாவட்ட அணி அமைப்பாளர் விஜயன், ஒன்றிய துணைச் செயலாளர் அலெக்ஸ்பாண்டியன், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், கிளைச் செயலாளர்கள் அற்புதம், ரவிக்குமார், கணேஷ்குமார், ஜெயராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயபிரகாஷ்,தேவிமகேந்திரன், தனுஷ்கோடி, செந்தில்குமார்,மாவட்ட அணி துணை அமைப்பாளர் பிரதாப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தவசதீஷ், பொறியாளரணி பாலகிருஷ்ணன், ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *