தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க பயிற்சி அறிமுகம் நடைபெற்றது.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பயிற்சியில் அறிமுக உரையாற்றிய செஸ் பயிற்சியாளர்கள் சந்தியா, திவ்யா ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் பேசும்போது , சதுரங்கத்தில் உள்ள பல்வேறு காயின்கள் தொடர்பாகவும், அவற்றின் புள்ளிகள் குறித்தும், சதுரங்க போர்டு குறித்தும் பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.