புதுச்சேரியில் அருகே பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பூரணாங்குப்பம் தன சுந்தராம்பாள் சாரிட்டபிள் சொசைட்டி சார்பாக மாணவர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி 12-வது ஆண்டாக நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் திரு சிரில் ஜியோ போர்ட் லூயிஸ் அவர்கள் தலைமையில் ஆசிரியர் திரு .ஆனந்தன் அவர்கள் வரவேற்றார் நிகழ்ச்சியில் தனசுந்தராம்பாள் சாரிடபுள் சொசைட்டி நிறுவனர் திரு. பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடை அட்டை வழங்கினார்,
சிறப்பு அழைப்பாக முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் திருவேடம் அவர்கள் கலந்து கொண்டார். முடிவில் ஆசிரியர் திரு வடிவேலு அவர்கள் நன்றி கூறினார்கள் பள்ளியில் பயிலும் 200 மாணவர்களுக்கும் தனியார் பள்ளிக்கு நிகராக அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கு பெற்று சிறப்பு செய்தனர்