சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 2ல் உள்ள 20 வது வார்டு பெரிய தோப்பு கிராம வ உ சி பொதுநலடிரஸ்ட்க்கு சொந்தமான நூறாண்டுகள் பழமை வாய்ந்த கிராமதேவிபிடாரி ஸ்ரீ ஆயிரம் காத்த அம்மன் ஐந்தாம் வாரம் ஆடி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்

அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு வண்ண மலர்களால்சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கூல் உற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மஹாத்தி சட்டி எடுத்துஅம்மனுக்கு கும்ப படையல் இட்டு ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

அதன் பிறகு அம்மன் வீதி உலா புறப்பட்டது இந்த திருவிழாவை பெரிய தோப்பு கிராம வ உ சி பொதுநல டிரஸ்ட் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் செயலாளர் டில்லி பாபு பொருளாளர்சுரேஷ் துணைச் செயலாளர்கள் சீனிவாசன் பரமசிவம் துணைத்தலைவர்கள் ராஜேந்திரன் ரவிக்குமார் இணை செயலாளர்கள் முருகன் ராஜேஷ்குமார் கோபிநாத் கிராம முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பெரிய தப்பு கிராம இளைஞர்கள்‌ பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *