தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியராக விஷு மகாஜன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் 29-வது கலெக்டராக விஷு மகாஜன் ஐஏஎஸ் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்…