மன்னார்குடி., ஏப்ரல். 04
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் 100% வாக்குப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலர் யோகேஸ்வரன் மாற்றுத்திறனாளிகள் வாகனத்தில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி துவக்கி வைத்தார். அதேபோல் அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் 100% வாக்களிப்போம் என்று கையெழுத்து இட்டனர் .