தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் திரு K.P. முருகன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளில் வீர வணக்கத்தையும் புகழ் அஞ்சலியும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின்
காங்கிரஸ் இயக்கத்தின் மிகப்பெரும் தூணாகவும் செயல்பட்டவர்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நம்பிக்கை கூடியவராகவும், தமிழகத்திலே மக்கள் தலைவர் ஐயா G.K.மூப்பனார் அவர்களுடன் நெருக்கமான நண்பராகவும் தேசிய பாதையில் தூய்மையாகவும், நேர்மையாகவும் தன் வாழ்க்கை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவர் திரு. K.P.முருகன் அவர்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்
எண்ணங்களை முழுமையாக தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட
நசுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து அவர்களின் உரிமைகளுக்காகவும்
வாழ்வாதாரங்களுக்காகவும் போராடிய மிகப்பெரும் சமுதாயத் தலைவர் என்பதை நாடறியும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவராக செயல்பட்டு தமிழகம் முழுவதும்அனைத்து கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், மத்திய-மாநில அரசுகளின் நல திட்டங்கள் அனைவருக்கும் கிடைத்திட தன் வாழ்வை அர்ப்பணித்த தலைவர்
திரு. K.P. முருகன். பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த உத்தமர் அவரின் நினைவு நாளில் நாம் நன்றியோடு நினைவு கூர்ந்து
அவர் வழியில் கொள்கைகளை கடைபிடிப்போம்.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மாநில துணைத் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு.