தமிழகம் முழுவதும் உள்ள பல ஜவுளி கடைகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மற்றும் சென்னையில் உள்ள சாரதாஸ் ஜவுளி கடைகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது
திருச்சி மலைக்கோட்டை என் எஸ் பி சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான சாரதாஸ் ஜவுளி கடையில் வருமானவரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்களின் பாதுகாப்பில் பத்துக்கு மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை : உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்