திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி ‘சட்ட மேதை அம்பேத்கர்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ம.ரகுபாரதி, சமூக ஆர்வலர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் ஜி.விநாயக மூர்த்தி வரவேற்றார்.


சிறப்பு அழைப்பாளராக, தமுஎகச வந்தவாசி கிளை தலைவர் கவிஞர் பூங்குயில் சிவக்குமார் பங்கேற்று, ‘சட்டமேதை அம்பேத்கர்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் அம்பேத்கரின் அரும்பணிகளை பல்வேறு படிநிலைகளில் விளக்கி கூறினார். மேலும் இந்த நிகழ்வில் கோல்ட் லீப் எக்ஸ்னோரா நிர்வாகி கவிஞர் கேப்டன் பிரபாகரன் கவிதை வாசித்தார். ஆசிரியர் மகாவீர், லாரன்ஸ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தனித் தேர்வு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பிறகு அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, தென்னாங்கூர் ரஜினியின் அம்பேத்கர் பாடல்கள் பாடப்பட்டது. இறுதியில் முதுகலை ஆசிரியர் எ.ராஜ்குமார் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *