கரூர் செய்தியாளர் மரியான் பாபு

டாக்டர் அம்பேத்காரின் 135 வது பிறந்தநாள் விழா..

கரூர் மாநகர மனோகரா கார்னர் அருகில் காமராஜர் சிலை முன்பு சட்டமேதை டாக்டர் அம்பேத்காரின் 135 வது பிறந்தநாள் விழாவை பட்டியலின விடுதலைப் பேரவையின் சார்பில் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி,மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சிபட்டியலின விடுதலைப் பேரவையின் நிறுவனத் தலைவர் தலித் ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேரவையின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *