தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் முரளிதரன்
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா, பெரிய கோயில், மேம்பாலம், கணபதி நகர், பாலாஜி நகர், லெட்சுமி சீவல், சுந்தரம் நகர், மெடிக்கல் காலேஜ்.மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, வைரம் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் பேசியதாவது முன்னால் இருந்தவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை விட நான் உங்களின் பிரச்னையை அறிந்தவன் என்ற முறையில் உங்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நிற்பேன். எனக்கு வைரம் சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.