மன்னார்குடி., ஏப்ரல். 30

தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள கர திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ” கர “படம் பார்த்த பின்பு நடிகரும் சிவகங்கை தொகுதி வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்…அப்போது கருத்து கணிப்பு குறித்தான செய்திகள் களத்தில் நின்று உள்ளேன் களத்தில் பணியாற்றி மக்களை சந்தித்துள்ளேன் கருத்து கணிப்பு என்கிற பெயரில் 10 பேரிடம் கருத்து கேட்டுவிட்டு ஒவ்வொரு சேனலும் ஒரு ஒரு கருத்தை கூறி வருகிறார்கள் .

நேற்று மாலை 6 மணிக்கு 5 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் எனவும் அடுத்த அரை மணி நேரத்தில் ஒத்த இலை பழனிச்சாமியும் , அடுத்ததாக விஜய் ஆட்சியை பிடிப்பார் என வரும் கருத்து கணிப்பு காமெடியாக இருக்கிறது .

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திய தாலும் 5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சியை செய்ததாலும் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் தோன்றும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளதற்கு முக்கிய காரணம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் மூலம் வெளிநாட்டில் உள்ளவர்கள் , இதுவரையிலும் வாக்களிக்காதவர்கள், இறந்தவர்களை கணக்கெடுத்து நீக்கியதால் தான் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

மாநில சுயாட்சி காப்பாற்றபட வேண்டும் தமிழர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் கொள்கைபிடிப்பின் படி 23 தோழமை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று அசுர பலத்தோடு தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பார் என நடிகர் கர்ணாஸ் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *