தாராபுரம்
செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் வி காளிமுத்து மறைவை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கார்த்தி சிதம்பரம் கிறிஸ்டோபர் திலக் தாராபுரம் அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள அவருடைய திருஉருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
நேரில் அவரது இல்லத்திற்குவந்து திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து 18 ஆண்டுகள் வீராச்சிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராகவும் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட காங்கிரஸ் கட்சி சார்பில் செயல்பட்டார் நேற்று முன்தினம் அவர் மாரடைப்பார் காலமானார் இந்நிலையில் தாராபுரம் அண்ணா சிலை அருகே அவரது உருவப்படத்திற்கு அனைத்து கட்சியினரும் இணைந்து மலர் பாளையம் வைத்து படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் அண்ணா சாலையில்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் வந்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்பொழுது அவர் பேசுகையில் காளிமுத்து மிகுந்த தன்னம்பிக்கையும் நெஞ்சுருதையும் கொண்டவர் அவர் ஐந்து ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அவரோட பணியாற்றியது மிகவும் பெருமைக்குரியது அனைவரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர் யாரிடம் கோபப்பட மாட்டார் போன்ற செயல்கள் பேசினார் இந்த நிகழ்வில் தமிழக மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் அங்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று காளிமுத்து உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் மாவட்டத் தலைவர் கிட்டுச்சாமி முன்னாள் மாவட்ட தலைவர் தென்னரசு திமுக ஒன்றிய நகர முன்னாள் இந்நாள் நகராட்சி தலைவர்கள் வர்த்தக சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.