முதலமைச்சர் அரங்கசாமி அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் பாராட்டு.
புதுச்சேரி அரசின் நிதி நிலை அறிக்கையில் முதல்வர் ரங்கசாமி புதுவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்றும் தமிழ் வளர்ச்சி சிறகம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் வி.முத்து தலைமையில் செயலர் பாவலர் சீனு .மோகன்தாசு பொருளர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் பொறிஞர் பாலசுப்பிரமணியம் துணைச் செயலர் பாவலர் அருள்செல்வம் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
உலகத் தமிழ் மாநாடு நடத்த புதுவைத் தமிழ்ச் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும்
தமிழ் வளர்ச்சி சிறகத்திற்கு பதிலாக தமிழ் வளர்ச்சித் துறை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.