மன்னார்குடி அருகே தென்பரை ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம் குதிரை எடுப்பு திருவிழா 3000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஒருவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல தடையாக அமைவது என்னவென்றால் அது முன்னோர்கள் சாபம். அத்தகைய சாப விமோசனம் அளிக்கும் ஸ்தலமாக இருந்து வரும் தென்பரை ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம் குதிரை எடுப்பு திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தென்பரை கிராமத்தில் அமைந்துள்ள தொன்மைமிக்க ஆலயம் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம்.

இத்தகைய ஆலயத்தில ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சித்திரை திருவிழாவில் குதிரை எடுப்பு விழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது.

இவ்விழாவையொட்டி ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீ ஆவணியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், தயிர், சந்தனம் முதலிய வாசனை திரவிய நறுமண பொருட்களை கொண்டு மகா அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

குறிப்பாக இந்நாளில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கலந்து கொள்ளும் பக்தர்கள் கடும் விரதம் இருந்து குதிரை மலைகளை சுமந்து வந்தால் நினைத்த காரியம் கைகூடி நற்பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

அதன்படி மனிதனுக்கு உலகிலேயே தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை உண்டு என்றால் அது முன்னோர்கள் சாபம். அத்தகைய முன்னோர்களின் சாபத்தில் இருந்து விமோசனம் அளிக்க வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், குழந்தைகள் கல்வி மேம்படவும், தொழில் அபிவிருத்தி அடையவும் குதிரை மலைகளை சுமந்து ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீ ஆவணி அப்பனை பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.

இவ்விழாவில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க குதிரை மதலைகளை ஊர்வலமாக சுமந்து ஆலயத்தை வலம் வந்து தங்களது நினைத்த காரியம் கைகூட வேண்டி இறைவனை மனமுருக வழிபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *