கரூர் செய்தியாளர் மரியான் பாபு
தமிழக சட்டசபையில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களின் கட்சி பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொண்ட நிலையில்,அதிமுக கழக பொதுச்செயளாளரும்,முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை அலுவலகத்தில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்தார்.
அதில் கரூர் மாவட்ட செயலாளராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.பின்னர் புதிய மாவட்ட செயலாளராக கரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த கமலகண்ணணை கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக நியமனம் செய்தார்.