தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்யகோரி மாவட்டம் முழுவதும் 457-மருந்து கடைகள் அடைத்து போராட்டம் இதனால் 50-லட்சம் ரூபாய்க்கான விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த்ள்ளனர்.
அகில இந்திய மருந்து வணிக சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிக சங்கங்களின் உத்தரவின்பேரில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெயய் வழியுறுத்தி இன்று ஒரு நாள் தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 457- மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி-யில் மருந்து கடைகள் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்யகோரி மருந்து கடை உரிமையாளர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்
மேலும் இந்த கடை அடைப்பின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 50-லட்சம் ரூபாய் மருந்து விற்பனை-யில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
முத்துகிருஷ்ணன்,மருந்து கடை உரிமையாளர்.