நீடாமங்கலம்., மே 24

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்..அப்போது சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் ராகுல் காந்தி எதிராகவும் கண்டன கோஷம் எழுப்பியதை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கடந்த 11 ஆண்டுகளில் கூட்டணியில் இருந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு பாராளுமன்ற தேர்தலில் உள்ளாட்சி தேர்தலை சந்தித்திருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை எடுத்து நாங்கள் அந்த ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.

இதை பொருக்க முடியாத திமுகவினர் பொது வெளியிலோ ஊடகங்களில் காங்கிரஸுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருவது திமுகவின் மிக மோசமான நிலைப்பாடு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்திருக்கிறது என்றால் அதை பொறுத்துக் கொள்ள முடியாத திராவிட முன்னேற்ற கழகம் இன்றைய வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை.

கூட்டணி கட்சிகள் நாங்கள் அவருக்கு ஆற்றிய பணிகள் எல்லாம் உங்களுக்கு காட்டிய சேவைகளை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை இன்னும் பல்வேறு விஷயங்களில் கடுமையான போராட்டங்களை கடுமையான விமர்சனங்களை முன்வைக்க காத்திருப்போம்.

2006 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது 96 எம்எல்ஏக்கலை வைத்து மயினாரிட்டி ஆட்சி அமைத்த போது நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து அந்த ஆட்சியை ஐந்து ஆண்டு காலம் அமைதியாக நடைபெறுவதற்கு உறுதியாக இருந்தோம்.

இப்படி பல்வேறு நிலைகளிலே காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துணையாக இருக்கின்றது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலே காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்ற போது.

2ஜி வழக்கின் மூலமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததற்கு காரணமே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்பாடுகள் தான் அதிலே வந்து அமைச்சராக இருந்தவர்கள் செய்த தவறுகள் காரணமாக காங்கிரஸ் கட்சி தனது அந்த சுமையை சுமந்து கொண்டு ஆட்சியை இழப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் காங்கிரஸ் கட்சி இவர் பல்வேறு தியாகங்களை செய்த சூழ்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்தல் மூலமாக அது காரணத்தை காட்டி திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களும் தொண்டர்களும் இப்படி கோபப்படுவது பேசுவது வன்மையாக பேசுவது மூன்றாம் தர ,இரண்டாம் தர , நான்காம் தர அரசியல் வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவது என்பது ஒரு ஏற்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய செய்தி அல்ல.

முன்னாள் அமைச்சராக இருக்க கூடிய ஆராசா அவர்கள் மிக மோசமான வார்த்தையை உச்சரித்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டு இருக்கின்றார் இதையெல்லாம் அவருடைய வகித்த பதிவிற்கு இருக்கின்ற பதவிக்கும் அழகு அல்ல என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது தொடர்ந்து நீடிக்குமேயானால் காங்கிரஸ் கட்சி அதற்கு சரியான பதிலடி கொடுப்பதற்கு தயாராக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மிகப்பெரிய கப்பலில் ஆயிரம் ஓட்டைகள் விழுந்திருக்கின்றது.

அந்த ஓட்டைகளை அடைப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டுமே தவிர தங்களைப் பற்றி தோல்விக்கான சுய பரிசோதனை செய்து தோல்விக்கான காரணத்தை கண்டறிய வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு காங்கிரஸ் விமர்சிப்பதால் பிஜேபியோடு இணைவதற்கு இயங்குவதற்கு செல்கிறாரா என்று ஐயப்பாடு எங்களுக்கு ஏற்படுகிறது.

அந்த வகையிலே காங்கிரசை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு தங்கள் கட்சியை வளர்ப்பதற்கும் மீண்டும் அந்த கட்சி பலத்தோடு செயல்படுவதற்கும் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கும் தவிர காங்கிரசை விமர்சிப்பது என்பது மிக தவறான செயல் அரசியல் நாகரிகம் மற்ற செயல் என தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *