​கோயம்புத்தூர், மே 24: ‘பல்சமய நல்லுறவு இயக்கத்தின்’ (All Religious Affinity Movement) மாநில இணைச் செயலாளராக கே. சாதிக் பாஷா நியமிக்கப்பட்டுள்ளார்.


​இதுகுறித்து இயக்கத்தின் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
​கடந்த 05-04-2026 அன்று பல்சமய நல்லுறவு இயக்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இயக்கத்தின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், புதிய நிர்வாகிகளின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


​அதன் அடிப்படையில், இயக்கத்தின் நல்லிணக்க செயல்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காகப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, இயக்கத்தின் மாநில இணைச் செயலாளராக கே. சாதிக் பாஷா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
​புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு அனைத்து தரப்பினரும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கி, சமூகத்தில் நல்லிணக்கத்தை வளர்க்க உதவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *