லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) கடந்த 22ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கீழ அன்பில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.