தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் சட்டமன்றம் உள்ளார் தளவாய்புரத்தில் சில தினங்களுக்கு முன்பு விவசாயி அந்தோணிராஜ் என்பவரை விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த அவர் விஷம் அருந்தினார்.இதில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலையில் மரணம் அடைந்தார் அதனை கண்டித்து சிவகிரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது